மட்டு - கல்லடி புதிய கல்முனை பிரதான வீதியில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.


 (லியோன்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி புதிய கல்முனை பிரதான வீதியில்  உள்ள இரண்டு  வர்த்தக நிலையங்கள் 14.06.2016  இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தன்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்
14.06.2016   இரவு கல்லடி புதிய கல்முனை  பிரதான வீதியில் உள்ள இரண்டு  வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக  மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களினால் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

14.06.2016   நள்ளிரவு காலப்பகுதியில்  பல்பொருள்  வர்த்தக நிலையங்கள் இரண்டு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக   இடத்திற்கு  சென்ற காத்தான்குடி  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்வருகின்றனர்.