மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலக ஊழியர்கள் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (VIDEO & PHOTOS)

(லியோன்)


இலங்கை அஞ்சல் சேவை ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த
12ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் மேலதிக பனி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
.இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலக ஊழியர்கள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில்  சிறிலங்கா தபால் தொலைத்தொடர்புச் சேவை சங்கம் , அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேiயாளர் சங்கம் ,  தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கம் ஆகியன  இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை  மேற்கொண்டனர்  

இதன் போது புதிய சம்பளத்திட்டத்திற்கமைய அஞ்சல் ஊழியர்களுக்கு 25 வீதம் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் 50 வீதம் போனஸ் கொடுப்பனவை வழங்கவேண்டும் , பதவி உயர்வுகளுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் , அனைத்து தரங்களிலுமுள்ள ஊழியர்களுக்கான சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டும் , கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை உடனடியாக வழங்க வேண்டும்.

அஞ்சல் அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மோட்டார் சைக்கிள்களை உடன் வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு அஞ்சல் அலுவலக ஊழியர்கள் மற்றும் தபால் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ரதீஸ்வரன் இதன்போது கருத்து தெரிவிக்கையில் ,எங்களது அஞ்சல் சேவை என்பது அத்தியாவசியமான ஒரு சேவையாகும். எங்களுக்கு 1966ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வந்த மேலதிக கொடுப்பனவு இவ்வாண்டு மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.


இந்த மேலதிக கொடுப்பனவை எமது அஞ்சல் திணைக்களம் உடனயடியாக வழங்க வேண்டும். அதேபோன்று புதிய சம்பளத்திட்டத்திற்கமைய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலகதிக கொடுப்பனவை உடன் வழங்க வேண்டும் என தமது கோரிக்கைகளை  வலியுறுத்தியே  இன்றைய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .