(லியோன்)
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி சுற்றாடல் முன்னோடி மாணவ
குழு ஏற்பாட்டி சுற்றாடலை பாதுகாக்கும்
வழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் 14.06.2016
இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரி சுற்றாடல் முன்னோடி மாணவ
குழு ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் திருமதி என். துரைராஜசிங்கம் . தலைமையில் உலக
சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு சுற்றாடலை பாதுகாக்கும் நோக்குடன் கல்லூரி
மாணவர்களினால் சுற்றாடலை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும்,
வீதிநாடகமும் அதனுடன் இணைந்ததாக பொலித்தின் பாவனையை தடுக்கும் வகையிலான பைகள் விற்பனையும் இடம்பெற்றது
இடம்பெற்ற சுற்றாடலை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வில்
பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட செயலக பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரஜனி பாஸ்கரன் , கல்லூரி ஆசிரியர்கள் ,
மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்.