(லியோன் )
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலய “ஆச்சி முத்துமாரி “ பக்தி பாடல்கள் இசை இறுவெட்டு
வெளியீட்டு விழா ஆலய
மண்டபத்தில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்லடி
முகத்துவாரம் மகேஸ்பரராஜா தினேஷ்ராஜ் தயாரிப்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பாரிபாளன சபையினால் ஆலய கும்பாபிஷேக நிகழ்வினை முன்னிட்டு நிதி
சேர்க்கும் முகமாக “ஆச்சி முத்துமாரி “எனும்
பக்தி பாடல்கள்
அடங்கிய இசை இறுவெட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் வி தவராஜா கலந்துகொண்டு
இறுவெட்டினை வெளியிட்டு வைத்தார் .
இந்த இறுவெட்டு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி தவராஜா
தெரிவிக்கையில் அம்மன் வழிபாடு என்பது
மட்டக்களப்பு சமுதாயத்தினுடைய நெருக்கமான நமக்கே சொந்தமான ஒரு வழிபாடுதான்
அம்மன் வழிபாடாகும் .
மட்டக்களப்பாருக்குரிய சொந்தமான வழிபாடுகளில் அம்மனும் அதோடு இணைந்த
வைரவர் வழிபாடாகும் .
கிராம புறங்களிலே அம்மன் வழிபாடு என்பது ஆண்டுக்கு ஒரு தடவை வீட்டிலே
நாங்கள் வழிபடுகின்ற முறை இருக்கின்றது .
இன்றைய நவீன ஓட்டத்திலே அது சற்று குறைவடைந்து வந்தாலும் இன்னும்
கிராமத்தவர்கள் அதனை பேணிக்கொண்டு வருகிறார்கள் .
அங்கே அம்மன் வழிபாடு நடக்கின்ற பொழுது அம்மன் நேரடியாக வந்து
எங்களுக்கு அருள் பாலிப்பாள் . அங்கே அம்மனாக கலைகொண்டு ஆடுபவர் நமது உறவு
முறைகளில் ஒருவராக வந்து அருளை கூறி
அடங்குவார் .
அதே போன்று தான் வைரவரை எமது காவல் தெய்வமாக வைத்திருக்கின்றோம்.
இவ்வாறு இறுக்கமாகவும் ,சுதந்திரமாகவும் , நெருக்கமாகவும் இருக்கும்
அம்மன் வழிபாட்டு முறை அண்மைய காலங்களில் சற்று மாறுபட்டு வருவதை காணக்கூடியதாக
இருக்கின்றது .
சடங்கு கோயில்கள் எல்லாம் நித்திய பூஜைகள் நடக்கின்ற கோயில்களாக மாறிக்கொண்டு
வருகின்றது .
சடங்கு வழிபாட்டுக்கு இருக்கின்ற தனி தன்மை மாறுபட்டு விடுமோ என்கின்ற
ஆபத்தும் எமக்குள் இருக்கின்றது .
ஆனால் இந்த ஆலய வழிபாடுகள் ஆண்டு தோறும் சடங்குகளை நடாத்தி சிறப்பாக
செய்து வருகின்றார்கள் .
அதேபோன்று இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிகழ்வுக்காக
நிதியினை பெற்றுக்கொள்ளும்
நோக்குடன் “ஆச்சி முத்துமாரி “ எனும் பக்தி
பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியிடப்படுகின்றது .
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்காக நிதி சேகரிப்பது போல் இந்த கிராமத்தில் கல்வி பயிலும்
மாணவர்களின் கல்விக்கும் உதவிகளை செய்யுமாறும் இந்த இறுவெட்டு விழாவில் பிரதம
விருந்தினராக கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்துக்கொண்டார் .
இந்த இறுவெட்டு வெளியீட்டு
நிகழ்வில் கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய
பரிபாலன சபை உறுப்பினர்கள் , ஆலய பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .