மட்டக்களப்பு - ஏறாவூர் செங்கலடி பிரதேச சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனித இப்தார் நிகழ்வு(VIDEO & PHOTOS)

(லியோன்)

“அன்பு அறமும் இணையும் சர்வ மத ஒன்றியத்திற்கு கை கொடுப்போம் எனும் தொனிப்பொருளில்”  புனித இப்தார் நிகழ்வு 23.06.2016 வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் அனுசரணையில் எகெட் நிறுவகத்தின்  கீழ் இயங்குகின்ற மூன்று சர்வமத அமைப்புக்களுடன்  இணைந்து ஏறாவூர் செங்கலடி பிரதேச சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  “அன்பு அறமும் இணையும் சர்வ மத ஒன்றியத்திற்கு கை கொடுப்போம் எனும் தொனிப்பொருளில்”  இடம்பெற்ற புனித இப்தார் நிகழ்வு  23.06.2016 வியாழக்கிழமை மாலை ஏறாவூர் அல் ஜீப்ரியா வித்தியாலத்தில் இடம்பெற்றது .


இடம்பெற்ற புனித இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகம் இயக்குனர் அருட்பணி ஜெரோம் டிலிமா, மட்டக்களப்பு மாவட்ட சைவ திரு நெறி மன்ற தலைவர் .எஸ்  சிவபிரகாசம்   , ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர். மௌலவி. எ. டப்ளியு . எம் . ஹாரிஸ்  ,சர்வமத ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் கரித்தாஸ் எகெட் நிருவாக ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .