‘மட்டக்களப்பு சிறையில் சந்திரகாந்தனுக்கு எந்த தனிப்பட்ட வசதியும் செய்யப்படவில்லை’

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் .பிரபாகரன் தெரிவித்தார்.
உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “ மனிதகுலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு சமூகம் “ எனும் தொனிப்பொருளில் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் என்பவருக்கு குளிரூட்டப்பட்ட அறை வழங்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்துவருகி;னறனர்.

ஆனால் அவருக்கு அங்கு எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.சாதாரண கைதிகளுடன் 11பேருடனையே ஒரு அறையில் அவர் இருந்துவருகின்றார்.அவருக்கு எந்தவித பிரத்தியேக வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.அண்மையில் நீதிவான் நீதமன்ற நீதிபதியும் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அதனை அவதானித்தார்.

ஆனால் அவருக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கமுடியும்.அதற்கான சட்டம் இருக்கின்றது.ஆனால் அவர் எந்த வசதியையும் சிறைச்சாலையிடம் கோரவில்லை.கைதிகள் அனைவருமே சமமாகவே நோக்கப்படுகின்றனர் என்றார்.