மட்டு - கல்லடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் வைத்தியசாலையில் ஒருவர் கைது ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை  இடம்பெற்ற  கைகலப்பில்  இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி பகுதி கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில்  உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை உணவு கொள்வனவு செய்வதற்காக கல்லடி பகுதியை சேர்ந்த நபர்  சென்ற வேளையில் உணவகத்தில் உள்ளவர்களிடம் வாய்தர்கத்தில் ஈடுபட்டுள்ளார் .

இதனை தொடர்ந்து குறித்த நபர் ஊருக்குள்  சென்று சிலரை அழைத்து சென்று உணவக  உரிமையாளரிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதுடன் உணவகத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர் .

சம்பவத்தின் போது காயங்களுக்கு உள்ளான நிலையில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .


சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதுடன்  மட்டக்களப்பு மாவட்ட  குற்ற தடவியல் பொறுப்பதிகாரி  ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.