(லியோன்)
ஊடகம் ,
ஊடகவியலாளருக்கான உரிமைகள் ,ஊடக சுதந்திரம் , தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு ஜூன் மாதம் 04ஆம் ,05ஆம் திகதிகளில் மட்டக்களப்பு தன்னாமுனையில் இடம்பெற்றது .
இடம்பெற்ற செயலமர்வானது தற்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஊடவியலாளர்கள் ,வளர்ந்து வருகின்ற
ஊடகவியலாளர்கள் சிறந்த முறையிலே செயல்பட்டு வருவதற்கும், அத்தோடு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக
ஒரு திட்டமாக இந்த இரண்டு நாள் செயலமர்வுகள்
இடம்பெற்றது ,
இந்த பயிற்சி செயலமர்வின்
போது கடந்த கால பகுதியில் பெற்றுக்கொள்ள
முடியாத சட்ட ரீதியான ஊடக பயிற்சிகளும் ,
ஊடக அறம், ஊடக தணிக்கைகள் , தகவல் அறியும் உரிமைகள் , அதற்கான அறிவு சார்ந்த
ஆராச்சிகள் , தகவல் தேடல்கள் மற்றும் சர்வதேச நியமங்கள் , சட்டங்கள் , எங்களுடைய
நாட்டு சட்டதிட்டங்ககள் , சமூக விழிமியங்கள் போன்ற பல்வேறு பட்ட ஊடக சட்ட செயல்பாடுகள் தொடர்பான விரிவுரைகளும் , பயிற்சிகளும் வழங்கப்பட்டது
இந்த செயலமர்வில் வளவாலர்களாக மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதேச முகாமையாளர்
கே . ஸ்ரீகுமார் , கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி . மோசேஸ் . ஊடக துறை விரிவுரையாளர் மோசேஸ் ,
மற்றும் ஹெக்டெட் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி சி .லாவண்ணியா ,
சொண்டு நிறுவன நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திருமதி . பிரிய ரஜனி , சட்டத்தரணிகள் சங்க திட்ட
உத்தியோகத்தர் , திருமதி . கமலிடாமற்றும்
, கிழக்கு மாகாண தமிழ் , முஸ்லிம் ,
சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .