(லியோன்)
2016 கலாசார திணைக்களத்தினால் தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் இலக்கியப் போட்டிகளுக்கான தேர்வு போட்டிப் பரீட்சை 10.06.2016 மட்டக்களப்பில்
இடம்பெற்றது .
இடம்பெற்ற போட்டி பரீட்சையில் கவிதைப்பாடல்கள், கையெழுத்துபோட்டி
,கவிதை , கட்டுரை , பாடல் நயத்தல் ஆகியவற்றுக்கான பரீட்சைகள் இடம்பெற்றன .
பிரதேச செயலக மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட இலக்கிய
போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மாவட்ட மட்ட இலக்கிய போட்டிகளிலும் அதனை
தொடர்ந்து தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர்
.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 10.06.2016 இடம்பெற்ற
2016 ஆம் ஆண்டுக்கான இலக்கிய
போட்டி பரீட்சை நிகழ்ச்சியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான
திருமதி . சாலினி மதனகுமார் , எ .எல் . முசாதிக் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .