கலாசார அலுவல்கள் திணைக்களமும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இலக்கிய போட்டி பரீட்சைகள்

(லியோன்)

2016 கலாசார திணைக்களத்தினால் தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில்  நடாத்தப்படும் இலக்கியப் போட்டிகளுக்கான தேர்வு  போட்டிப் பரீட்சை  10.06.2016 மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலை மானவார்களுக்கிடையில் கலாசார அலுவல்கள் திணைக்களமும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும்  இலக்கிய போட்டி பரீட்சைகள்   மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி .தவராஜா  தலைமையில் 10.06.2016  இடம்பெற்றது .

இடம்பெற்ற போட்டி பரீட்சையில் கவிதைப்பாடல்கள், கையெழுத்துபோட்டி ,கவிதை , கட்டுரை , பாடல் நயத்தல் ஆகியவற்றுக்கான பரீட்சைகள் இடம்பெற்றன .

பிரதேச செயலக மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மாவட்ட மட்ட இலக்கிய போட்டிகளிலும் அதனை தொடர்ந்து தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 10.06.2016 இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான  இலக்கிய போட்டி பரீட்சை நிகழ்ச்சியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி . சாலினி மதனகுமார் , எ .எல் . முசாதிக் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .