தொழிற்பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் நிதியத்தின் ஊடாக உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொழில் பயிற்சியை நிறைவுசெய்து யுவதிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
எஸ்.எம்.இராசமாணிக்கம் மக்கள் நிதியத்தின் ஊடாக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

எஸ்.எம்.இராசமாணிக்கம் மக்கள் நிதியத்தின் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் எஸ்.எம்.இராசமாணிக்கம் மக்கள் நிதியத்தின் முக்கியஸ்தர் கீர்த்தி இராசமாணிக்கம் மற்றும் அவுஸ்ரேலிய நாட்டினை சேர்ந்த நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொழில் பயிற்சியை நிறைவுசெய்த 13 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவான விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான செலவுக்கான நிதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.