கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அலுவலகம் ஜெயந்திபுரத்தில் 17.06.2016 திறந்து வைக்கப்பட்டது (VIDEO & PHOTOS)

(லியோன்)

மட்டக்களப்பு நீதி சமாதான மனித மேம்பாட்டு ஆணைக்குழுவாகிய கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அலுவலகம் ஜெயந்திபுரத்தில் 17.06.2016  இன்று திறந்து வைக்கப்பட்டது .

 மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் நீதி சமாதான மனித மேம்பாட்டு ஆணைக்குழுவாகிய கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அலுவலகம் மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில்  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்கையினால் 17.06.2016  இன்று திறந்து வைக்கப்பட்டது .

இன்று காலை இடம்பெற்ற திறப்பு விழா விசேட நிகழ்வில் சிறப்பு வழிபாடுகளும் அதனை தொடர்ந்து நீதி சமாதான மனித மேம்பாட்டு ஆணைக்குழுவாகிய கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ( முருகன் ) ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்கள்,  மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , பொது நிலையினர் மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்துகொண்டனர் .