மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவை ( VIDEO & PHOTOS )

(லியோன்) 

ட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவை மட்டக்களப்பு (திராய்மடு) நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது

 ட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை 29.05.2016 மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில்   மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி எச் .டி .பி .கே .ஹெட்டிஆரச்சி தலைமையில்   இடம்பெற்றது .  

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ,திராய்மடு , பனிச்சையடி , நாவலடி , ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களின் நலன் கருதி  ட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை  இன்று மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில்   மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி எச் .டி .பி .கே .ஹெட்டிஆரச்சி தலைமையில்   இடம்பெற்றது

இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் மக்களுடைய பொலிஸ் சம்பந்த பட்ட முறைபாடுகள் , சிறுவர் மகளீர் தொடர்பான முறைபாடுகள் , கிராம மட்டத்தில் கிராம சேவையாளர்களின் ஆவன பதிவுகளான ,கடவுச்சீட்டு , தேசிய அடையாள அட்டை , காணி தொடர்பான ஆவன விபரங்கள், மோட்டார் வாகன தொடர்பான முறைபாடுகள் மற்றும் நோய் தொடர்பான ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகள் அதற்கான மருந்து விநியோகம் போன்ற சேவைகள் இடம்பெற்றது .


இந்நிகழ்விலே  மட்டக்களப்பு பொலிஸ்  பிரிவு சிவில் பாதுகாப்பு பிரதான  குழுத் தலைவர்  எஸ்.  ராஜன்  , கல்லடி ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் அருணன் , மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஜானக ரஞ்சித் , சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெ.எச் .டி .இந்துநில் பொலிஸ் ஆலோசனை குழு தலைவர் எஸ் .திருச்க்செல்வம், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் , கிராமசேவை உத்தியோகத்தர்கள்  மற்றும் பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .