கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ( VIDEO & PHOTOS )

(லியோன்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து  மட்டக்களப்பு மாணவ சமூகத்தினால் மட்டக்களப்பு திருகோணமலை வீதி  சின்ன ஆஸ்பத்திரி  அருகில் அமைதியான முறையில்  தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர் .


குறித்த மாணவன் தனது  முகபுத்தகத்தில் (முகநூல்)  முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைத் தரவேற்றம் செய்தமையைக் கண்டித்து குறித்த மாணவனை  பெரும்பான்மையின மாணவர்களின் தாக்கப்பட்டுள்ளார்

இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனத் தெரிவித்துள்ளதுடன்  பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட  வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்   கோரிக்கை விடுத்தனர் .

இதன் போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற  இடத்துக்கு  வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் தமது கண்டனத்தையும் தெரிவித்துக்கொண்டார் .

இதனை தொடர்ந்து  மாணவர்களினால்  தமது கோரிக்கை அடங்கிய மகஜரரை  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடம் கையளிக்கப்பட்டதை  தொடர்ந்து களைந்து சென்றனர் .