வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு புதுபாலம் பகுதியில்   இன்று 28.05.2016 சனிக்கிழமை  காலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட   மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு செல்லும் பிரதான வீதியின்  புதுப்பாலம்   பகுதியில்  முச்சக்கர வண்டி  வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  வீதியை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததின்  காரணமாக   இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர்

செங்கலடி கொம்மாதுறை பகுதியை சேர்ந்த எஸ் . பற்குணம்  என்பவருடைய முச்சக்கர வண்டியே  இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது .

இன்று காலை  செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு தமது கடமை நிமித்தம்  செல்லும் வழியிலே   இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார் .

இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியும் அதில் பபயணித்த அவருடைய சகோதரனும்  காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்