மட்டக்களப்பு லங்கா ஆட்ஸ் அகடமி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு லங்கா ஆட்ஸ் அகடமி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  22.05.2016  மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு லங்கா ஆட்ஸ்  அகடமி ஏற்பாட்டில்  வருடாந்தம் நடத்தப்படும் ஓவியம்  வரைதல் பாடநெறிகள் அடங்கிய ஓவியப் பயிற்சி நெறியின் கண்காட்சியும் ஓவியங்களை தீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் லங்கா ஆட்ஸ்  அகடமி பணிப்பாளர்  ஜெயதீபன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில்  22.05.2016  இடம்பெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குபட்ட நான்கு வயது தொடக்கம் பதினெட்டு வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் ஓவியப் பயிற்சியினை முறையாக கற்று  தேசிய ரீதியிலும் , சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் மற்றும் மாவட்ட  மட்டத்திலும்  வெற்றி பெற்ற   மாணவர்களுக்கும் மற்றும் ஓவியப் பயிற்சியில் முறையாக ஓவிய கலையை கற்று சிறந்த ஓவியங்களாகவும் ,ஓவியர்களாகவும் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கும் சான்றிதழ்களும்   வெற்றிக்கிண்ணமும்  வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் ,    பேராசிரியர்  எஸ் . மௌனகுரு , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  டி .மேகராஜ் , ஓவியரும் ,ஆசிரியருமான ஆர் . ரவீந்திரன் மற்றும் மாணவர்கள் ,மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .