கிராம சேவையாளரின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு ( VIDEO & PHOTOS )

(லியோ)

கிராம சேவையாளரின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு 22.05.2016  இன்று மட்டக்களப்பு கல்லடி வேலூர் கிராமத்தில் இடம்பெற்றது.

 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர்   கிராமத்தில்  கிராம சேவையாளராக  கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும்  கிராம சேவையாளர் தெய்வநாயகம் சிவலிங்கத்தின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 22.05.2016 இன்று ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பு கல்லடி சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தில் கற்கைகள் நிலைய பணிப்பாளர் திருமதி . தேவரஞ்சினி தலைமையில் இடம்பெற்றது .

கடந்த மூன்று தசாப்த காலம் கிராம சேவையாளர் சேவையில் எட்டு வருடங்கள் கல்லடி வேலூர்   கிராம சேவை பிரிவில் கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும்  கிராம சேவையாளர் தெய்வநாயகம் சிவலிங்கத்தினை பாராட்டி  பொன்னாடை  போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில்  தற்போதைய கிராம சேவையாளர் எஸ் .தினேஷ் ,, சமூக மேம்பாட்டுக் கழக தவிசாளர்  த. நகுலேஸ்வரன் , மாதர் கிராம அபிவிருத்தி தலைவி  திருமதி . இந்துமதி கருணைரெட்ணம் மற்றும் சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தில் கற்கைகள் நிலைய ஆசிரியர்கள் , மாணவர்கள் , கிராம சமூக நல மேம்பாட்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .