மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைதடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி 06ஆம் வட்டாரத்தில் வைத்தே இந்த போதைப்பொருள் வர்த்தகர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 240 மில்லிக்கிராம் கரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஐ.ஏ.வஹாப் மற்றும் குறித்த பிரிவை சேர்ந்த பொலிஸ் சாஜன்ட் எம்.ரி.எம்.தாகா ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரும் போதைப்பொருளும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.
காத்தான்குடி 06ஆம் வட்டாரத்தில் வைத்தே இந்த போதைப்பொருள் வர்த்தகர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 240 மில்லிக்கிராம் கரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஐ.ஏ.வஹாப் மற்றும் குறித்த பிரிவை சேர்ந்த பொலிஸ் சாஜன்ட் எம்.ரி.எம்.தாகா ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரும் போதைப்பொருளும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.