(லியோ)
அவுஸ்திரேலிய
நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கல்லடி
வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார் .
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறந்த செயற்பாடுகளுடைய பாடசாலையாக தெரிவு
செய்யப்பட மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி
வித்தியாலயத்திற்கு அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்
பிறேயீ ஹட்செஷன் இன்று விஜயத்தை மேற்கொண்டார் .
சுனாமியால்
பாதிப்புக்குள்ளான இந்த பாடசாலை கல்வி அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில்
காணப்பட்ட நிலையில் கடந்த 2012
ஆம் ஆண்டு பிள்ளை நேயப் பாடசாலையாக
உள்ளீர்க்கப்பட்டு அதன் உச்ச நிலையான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்ட கல்வித் திணைக்களத்தினால் முதன்மைப்
படுத்தப்பட்டது .
இதன் பின் பல
அபிவிருத்தி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் யுனிசெப் நிறுவனத்தினால் கையளிக்கப்பட்ட பல
செயற்பாடுகள் இவ் வித்தியாலயத்தில் செயற்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டது .
இதனை கருத்தில் கொண்டு யுனிசெப் நிறுவனத்தினால் இப்பாடாசாலைக்கு புதிய அபிவிருத்தி திட்டங்களை
செயல்படுத்தப்படவுள்ளது .
இந்த செயல்
திட்டங்களை இப்பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான உயர்
ஸ்தானிகர் பிறேயீ ஹட்செஷன் இன்று இந்த பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
விஜயத்தை மேற்கொண்ட உயர்
ஸ்தானிகர் பாடசாலையின் கல்வி சூழல் , மாணவர்களின்
கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றை பார்வையிட்டதுடன்
இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
இந்த கலந்துரையாடலின் போது மாணவர்களின் பெற்றோர்களினால்
பாடசாலையின் தரம் , பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற கல்வியுடனான பாடசாலையின் நவீன
வசதிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக சுட்டிக் காட்டப்பட்டதுடன் இதற்கான
தீர்வினையும் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது .
பாடசாலை அதிபர் எ
.ராசுவின் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய
உயர் ஸ்தானிகர் உளநல ஆலோசகர் சார்லோரி
புலூண்டல் , அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
இரண்டாம் நிலை செயலாளர் எட்வினா சிங்லயர் , மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்
.கே .பாஸ்கரன் , வலய கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசர் ஜெகநாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்
,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது அவுஸ்திரேலிய
உயர் ஸ்தானிகரினால் பாடசாலைக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.