மழை காரணமாக பாடுமீன்களின் சமர் பிற்போடப்பட்டது

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மத்தியகல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மோதும் பாடுமீன்களின் சமர் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி நடைபெறவிருந்த நிலையிலேயே பிற்போடப்பட்டுள்ளது.

பெய்துவரும் கடும் மழை காரணமாக குறித்த போட்டி பிற்போடப்பட்டுள்ளதாகவும் மீண்டும் நடாத்துவது தொடர்பிலான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.