(லியோன் )
மட்டக்களப்பு தமிழ்ச்
சங்கத்தினால் நடத்தப்பட்ட திருமதி . சுந்திரமதி வேதநாயகத்தின் சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா 24.05.2016 செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட
தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமதி . சுந்திரமதி வேதநாயகத்தின் , நல்லநட்பு ,
மீனுக்குட்டி , கோழியம்மா ஆகிய மூன்று சிறுவர் சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா
மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவர் சட்டத்தரணி எம்
. கணேசராஜா தலைமையில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் 24.05.2016 செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
உரையாற்றிய தமிழ்ச் சங்க தலைவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு
தமிழ்ச் சங்கம் மாதம் ஒரு நிகழ்வையாவது
நடாத்த வேண்டும் என்ற அடிப்படையிலே கடந்த மாதங்களில் சில நூல் வெளியீட்டு நிகழ்வுகளை தமிழ்ச்
சங்கத்தினால் நடத்தப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக
தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமதி. சுந்திரமதி வேதநாயகத்தின் மூன்று நூல்களை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தினால் வெளியிடப்படுகின்றன
.
கொழும்பு தமிழ்
சங்கமானது வாரம் ஒரு நிகழ்வாக தமிழ்
ஆய்வுகள் ,தமிழ் நூல்கள் வெளியீடுகள் போன்ற பல நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திவருகின்ற
வேளையில் மட்டக்களப்பு தமிழ் சங்கமும் தன்னாலான தமிழ் சார் பணிகளை
செய்துகொண்டிருக்கின்றது .
குறிப்பாக தமிழ்
சங்கத்துக்கு உள்ளேயே எழுத்தாளர்களும் , புலமை சார் பெருமக்களும் இருகின்ற காரணத்தினால்
எங்களால் இயன்ற அளவு இவ்வாறான நிகழ்வுகளை நடத்தகூடியதாக உள்ளது .
இந்த மூன்று
நூல்களையும் எழுதி வெளியிடுகின்ற எழுத்தாளர் திருமதி. சுந்திரமதி வேதநாயகம் தமிழின்பால் , கலை கலாசாரத்தின்பால்
கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணமாக அவரால் எழுதப்பட்டு நூல்கள் , நடத்தப்பட்ட நிகழ்வுகள் என பல நிகழ்த்தப்பட்டுள்ளன .
இவரினால் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான
இந்த மூன்று சிறிய நூல்கள் சிறியனவாக
இருந்த போதிலும் அது சிறுவர்களுக்கு பெரிய நூல்களாக அமைந்துள்ளது .
இந்த மூன்று
நூல்களையும் எழுதியதோடு இந்த நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்து தமிழ் சங்கத்தின் ஊடாக
இதனை வெளியிட்டு வைக்கின்றார் .
இது போன்று பல பணிகள்
இவரினால் தொடர வேண்டும் என்று மட்டக்களப்பு தமிழ்ச்
சங்க தலைவர் கேட்டுக்கொண்டதோடு ,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் .
இதனை தொடர்ந்து சுந்திரமதி வேதநாயகத்தின் , நல்லநட்பு ,
மீனுக்குட்டி , கோழியம்மா ஆகிய மூன்று சிறுவர் சிறுகதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வும், நினைவு சின்னங்கள் வழங்கும்
நிகழ்வும் இடம்பெற்றது .