மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்த
உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை
வடக்கு - வவுணதீவு – பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவில் பிரதேச மத்தியஸ்த
சபைகளில் மத்தியஸ்த உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு மண்முனை வடக்கு மத்தியஸ்த சபையின் தவிசாளர் எஸ் .
விஷ்ணுமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு இந்துக்கல்லுரி மண்டபத்தில் 14.05.2016 சனிக்கிழமை இடம்பெற்றது .
இடம்பெற்ற ஒன்றுகூடல்
நிகழ்வின் போது பிரதேச மட்டத்தில் ஏற்படுகின்ற பிணக்குகள் தொடர்பாக பிரதேச மட்ட
மத்தியஸ்தர்களினால் எவ்வாறு
கையாளப்படவேண்டும் , அவ்வாறு பிணக்குகளை
கையாளும் போது மத்தியஸ்தர்கள் முகம் கொடுக்கின்ற சவால்கள் , இதற்கான தீர்வினை
எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடரான விடயங்கள் இங்கு
கலந்துரையாடப்பட்டது .
இந்த கலந்துரையாடல் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிரதான
நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஜா மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அக்கீம் , வவுணதீவு பிரதேச செயலக பிரிவு மத்தியஸ்த சபை
தவிசாளர் வடிவேல் புஸ்பாகரன் , பட்டிப்பளை
பிரதேச செயலக பிரிவு மத்தியஸ்த சபை தவிசாளர் வள்ளிபுரம் சுப்பிரமணியம் மற்றும் மண்முனை வடக்கு , பட்டிப்பளை ,வவுணதீவு
பிரதேச மட்ட மத்தியஸ்தர்கள் கலந்துகொண்டார்
.