மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்த உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்று கூடல்

(லியோ )
மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்த உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு   மண்முனை வடக்கு -   வவுணதீவு –  பட்டிப்பளை  ஆகிய பிரதேச செயலக பிரிவில் பிரதேச மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்த உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு  மண்முனை வடக்கு  மத்தியஸ்த சபையின் தவிசாளர் எஸ் . விஷ்ணுமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு இந்துக்கல்லுரி மண்டபத்தில்  14.05.2016 சனிக்கிழமை  இடம்பெற்றது .
 
இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வின் போது பிரதேச மட்டத்தில் ஏற்படுகின்ற பிணக்குகள் தொடர்பாக பிரதேச மட்ட மத்தியஸ்தர்களினால்  எவ்வாறு கையாளப்படவேண்டும் ,  அவ்வாறு பிணக்குகளை கையாளும் போது மத்தியஸ்தர்கள் முகம் கொடுக்கின்ற சவால்கள் , இதற்கான தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடரான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது .


இந்த கலந்துரையாடல் இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிரதான நீதிமன்ற  நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  மற்றும்  காத்தான்குடி பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி அக்கீம் ,  வவுணதீவு பிரதேச செயலக பிரிவு மத்தியஸ்த சபை தவிசாளர்  வடிவேல் புஸ்பாகரன் , பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவு மத்தியஸ்த சபை தவிசாளர் வள்ளிபுரம் சுப்பிரமணியம்  மற்றும் மண்முனை வடக்கு , பட்டிப்பளை ,வவுணதீவு பிரதேச மட்ட மத்தியஸ்தர்கள் கலந்துகொண்டார்








.