மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய
வருடாந்த அலங்கார உற்சவத்தின் 5தாம் நாள்
சடங்கு கல்யாணக் கால் வெட்டும் வைபவம் 14.05.2016 இடம்பெற்றது .
.கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு
தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 10ஆம்
திகதி திருக்கதவு திறத்தல்
வைபவத்துடன் ஆரம்பமாகி 5தாம் நாள் உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு ஆலய பிரதம குரு
சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில் 14.05.2016 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது .ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள் இடம்பெற்று ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு 14.05.2016 சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் கல்யாணக் கால் வெட்டும் வைபவம் இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் ஊர் காவல் பண்ணும் நிகழ்வு இடம்பெற்றது .
ஆலய உத்சவத்தின் 10ஆம் நாள்
சடங்கு 19.05.2016 வியாழக்கிழமை அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று 21.05.2016 சனிக்கிழமை
அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய உற்சவம்
இனிதே நிறைவு பெரும் .