தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கல்யாணக் கால் வெட்டும் வைபவம்

(லியோ)

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின்   5தாம் நாள் சடங்கு  கல்யாணக் கால் வெட்டும்  வைபவம்  14.05.2016  இடம்பெற்றது .
.கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார  உற்சவம் கடந்த 10ஆம் திகதி திருக்கதவு  திறத்தல் வைபவத்துடன்  ஆரம்பமாகி     5தாம் நாள் உற்சவத்தின்  கல்யாணக் கால் வெட்டும் சடங்கு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில் 14.05.2016  சனிக்கிழமை   மாலை  இடம்பெற்றது .
ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  இடம்பெற்று ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு    14.05.2016    சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் கல்யாணக் கால் வெட்டும்  வைபவம்  இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் ஊர் காவல் பண்ணும் நிகழ்வு இடம்பெற்றது .

ஆலய உத்சவத்தின்  10ஆம் நாள்  சடங்கு 19.05.2016 வியாழக்கிழமை அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று   21.05.2016 சனிக்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி  ஆலய உற்சவம் இனிதே நிறைவு பெரும் .