வடகிழக்கில் தாதிய பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐவா தேசிய தாதிய  பயிற்சி  நிலையத்தினால் தாதிய  பயிற்சிகளை முடித்துக்கொண்ட  தாதியர்களுக்கு சான்றிதழ் மற்றும் தாதிய தொப்பிகள் அணிவிக்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
  ஐவா தேசிய தாதிய  பயிற்சி  நிலைய பணிப்பாளர் சித்திக் நதீர் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலான கலந்துகொண்டார் .

தாதிய கல்வியை நிறைவு செய்துகொண்ட இளைஞர் , யுவதிகள்  வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐவா தேசிய தாதிய  பயிற்சி  நிறுவனம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் ,யுவதிகளுக்கு தாதிய பயிற்சிகளை வழங்கி அதனூடாக வேலைவாய்ப்பினை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கின்றது .

இதன் ஒரு செயல்திட்டமாக   ஐவா தேசிய தாதிய  பயிற்சி நிறுவனம் வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்த 150 இளைஞர் ,யுவதிகளுக்கு தாதிய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான சான்றிதழ்களையும் , தாதிய தொப்பிகளையும் இன்று வழங்கி வைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் தாதிய பயிற்சி நிலைய ஆசிரியர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.