மட்டக்களப்பில் வீதிகளை திருத்துவதற்கு 50இலட்சம் நிதி ஒதுக்கீடு –சிறிநேசன் எம்.பி.முயற்சியால் பலன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான வீதிகளை திருத்தும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை  ஆரம்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வீதிப்போக்குவரத்து நெஞ்சாலைகள் துறை அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அதற்கான ஐம்பது இலட்சம் ரூபாவினை அமைச்சர் ஒதுக்கீடுசெய்துள்ளார்.

இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கூழாவடி பிரதான வீதியை செப்பனிடம் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப்பொறியியலாளர் எஸ்.சசிநந்தன் தலைமையி;ல் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள்,தொழில்நுட்பட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.