(லியோன்)
திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற
நிகழ்வின் போது கிழக்குமாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை பேசியதை கண்டித்து
மட்டக்களப்பு நகரில் 26.05.2016 வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்குமாகாண முதலமைச்சர்
நசீர் அகமட் கடற்படை அதிகாரியை தரக்குறைவாக பேசியதோடு அவருக்கு அபகீர்த்தியை
ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து குறித்த அதிகாரியிடம் பகிரங்கமாக மண்ணிப்பு கூற வேண்டும் என பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டப்
பேரணி ஈடுபட்டனர்