ஏறாவூரில் கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

மட்டக்களப்பு,ஏறாவூர் பகுதியில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஒரு கிலோ கஞ்சாவுடன் மட்டக்களப்பு மாவட்ட போதைபொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் ஓடாவியார் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டுசென்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைபொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட உபபொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்றும் நான்கு வருடங்களுக்கு முன்னர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஐ.ஏ.வஹாப் மற்றும் குறித்த பிரிவை சேர்ந்த பொலிஸ் சாஜன்ட் எம்.ரி.எம்.தாகா ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரும் கஞ்சாவும் நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.