(லியோ)
விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்
அனுசரணையுடன் நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று 21ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிறிஜ் வியூ
ஹோட்டலில் காலை 9.00 மணிமுதல்
பிற்பகல் 04.00 மணிவரை நடைபெற்றது .
இடம்பெற்ற செயலமர்வில் வளவாளராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி .
அம்பிகா சற்குணநாதன் கலந்துகொண்டார்
இடம்பெற்ற செயலமர்வில் நிலை
மாறு கால நீதி தொடர்பான தெளிவூட்டல்கள் சமூக மட்டத்திலும் ஊடகவியலாளர்கள்
மத்தியிலும் இன்றைய கால கட்டத்தில் முக்கியமாக இலங்கையைப் பொறுத்தவரை நிலைமாறுகால
நீதியினை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தில் தேவை . இதற்கான ஆதரவுகளையும்
ஊடகவியலாளர்கள் வழங்கியாக வேண்டிய நிலையில் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
இந்த நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டில் நம்பிக்கையினை மீள
கட்டியெழுப்பல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை
பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை
அங்கீகரித்தல், நிலையான
சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவை முக்கிய பகுதிகளாக வளவாளரினால் விபரிக்கப்பட்டது
.
நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன
ரீதியிலான சீர் திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட
நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பது தொடர்பாகவும் , பிராந்தியங்களிலுள்ள ஊடகவியாலாளர்களும்
பங்களிப்பு வழங்க வேண்டிய வகையில் இந்த செயலமர்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .