(லியோ)
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்
மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு 03.03.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர்
மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை திறப்பு விழாவும்
பாடசாலைக்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு 03.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் வித்தியாலய
அதிபர் திருமதி . ஹரிதாஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன்
வணக்கத்துக்குரிய ஸ்ரீமத்சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டு பாடசாலை
வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலையினை திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார் .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர் எஸ் . யோகேஸ்வரன் மற்றும்
அதிதிகளாக அவுஸ்ரேலிய
தமிழ் பொறியியலாளர் சங்கம் என் .மோகனதாஸ் , மட்டக்களப்பு வலயக் கல்விப்
பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ . சுகுமாரன், உதவி கல்விப் பணிப்பாளர் (உடல்கல்வி
) வி .லவக்குமார் உட்பட கல்லடி நொச்சிமுனை
ஆலய பரிபாலன சபையினர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை
ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
பாடசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள
சரஸ்வதி சிலையானது பாராளுமன்ற உறுப்பினர்
எஸ் .யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு உதவியுடனும் , பாடசாலை நலன்விரும்பிகளின்
பங்களிப்புடன் இச்சிலை பாடசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது .
அத்துடன் அவுஸ்ரேலிய தமிழ் பொறியியலாளர்கள் சங்கத்தினால் இப்பாடசாலைக்கு போட்டோ
பிரதி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது .