பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னையின் புதிய ஆலயம் அபிஷேக ஆராதனையுடன் திறந்து வைக்கப்பட்டது .

(லியோ)

மட்டக்களப்பு  பெரிய புல்லுமலை  புதுமைமிகு  புனித செபமாலை அன்னையின் புதிய  ஆலயம் நேற்று   மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பெரிய புல்லுமலை  மறை கோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  புனித செபமாலை அன்னையின் புதிய  ஆலயம் நேற்று  வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி   மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் மாலை 04.30 மணியளவில்  ஆலய  திருவிழா கொடியேற்றப்பட்டு  புதிய ஆலயம் அபிஷேக ஆராதனையுடன் திறந்து வைக்கப்பட்டது . 

ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும்  29ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை 03.30 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து அன்னையின் திருத்தலத்தை நோக்கி  விசேட திருச்சுருப பவனியுடன் மாபெரும் பாதயாத்திரை இடம்பெறவுள்ளது .

எதிர்வரும் 30ஆம்  சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  புனித செபமாலை அன்னை திருத்தலத்தில்   அன்னையின் திருச்சுருப பவனியும் தொடர்ந்து விசேட நற்கருணை ஆராதனையுடன் திருப்பலியும் இடம்பெறவுள்ளது ..

மட்டக்களப்பு  பெரிய புல்லுமலை  புனித செபமாலை அன்னையின் திருத்தல திருவிழா திருப்பலி மே மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.15 மணிக்கும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் .