ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலய நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரருக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு  ஸ்ரீ  குமாரத்தன் ஆலய பரிவார மூர்த்தி நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரருக்கு   எண்ணெய்க்காப்பு சாத்தும்  நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது .

மட்டு- நகரில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஜெயந்திபுரம்  அருள்மிகு  ஸ்ரீ  குமாரத்தன் ஆலய  பரிவார மூர்த்தி நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரர்  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வை முன்னிட்டு இன்று  எண்ணெய்க்காப்பு சாத்தும்  நிகழ்வுகள் இன்று  மிக சிறப்பாக நடைபெற்றது .
 
கடந்த 22.04.2016   வெள்ளிக்கிழமை அதிகாலை 05.00  மணி தொடக்கம் 23.04.2016 சனிக்கிழமை மாலை வரை  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் ஆரம்பமான பூர்வாங்க கிரிகைகளை தொடர்ந்து  இன்று   ஞாயிற்றுக்கிழமை   காலை விசேட யாக பூசைகளை தொடர்ந்து திவ்விய ஹோமம் பூசைகள் இடம்பெற்று  நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரருக்கு  எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 08.00 மணி   முதல் பிற்பகல் 03.00 மணிவரை இடம்பெற்றது .

 இன்று இடம்பெற்ற  எண்ணெய்க்காப்பு சாத்தும்  நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்

 ஆலய பரிவார மூர்த்தி நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரர்  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன கும்பாபிஷேக நிகழ்வுகள்  நாளை திங்கட்கிழமை காலை சுபவேளையில்  சுத்தி புண்ணிய யாகம் , யாக பூசை பூரணாகுதி விசேட தீபாராதனை மற்றும்  கும்ப உத்தாபனம் ஸ்தூபி அபிஷேகம்  இடம்பெற்று  பரிவார மூர்த்தி நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரர்  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன கும்பாபிஷேக நிகழ்வுகள் பிரதிஷ்ட பிரதம குரு – சபரிமலை  குரு சுவாமி சபரீதாசன் யாழ் உரும்பிராய் ஐயப்பன் ஆலய ஆதினகர்த்தா சிவாச்சாரிய மாமணி பிரம்மஸ்ரீ – தானுவாசு தேவ சிவாச்சாரியார் தலைமையில்  இடம்பெறவுள்ளது .