(லியோ)
மட்டக்களப்பு
ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலய பரிவார மூர்த்தி நவக்கிரகம்
மற்றும் சண்டேஸ்வரருக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது .
மட்டு- நகரில் சிறப்பு
மிக்க மட்டக்களப்பு ஜெயந்திபுரம்
அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலய பரிவார மூர்த்தி நவக்கிரகம் மற்றும்
சண்டேஸ்வரர் பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக
விஞ்ஞாபனம் நிகழ்வை முன்னிட்டு இன்று எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது .
கடந்த 22.04.2016 வெள்ளிக்கிழமை அதிகாலை 05.00 மணி தொடக்கம் 23.04.2016
சனிக்கிழமை மாலை
வரை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் ஆரம்பமான
பூர்வாங்க கிரிகைகளை
தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விசேட யாக பூசைகளை தொடர்ந்து திவ்விய ஹோமம்
பூசைகள் இடம்பெற்று நவக்கிரகம் மற்றும்
சண்டேஸ்வரருக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும்
நிகழ்வு காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்