ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய புத்தாண்டு பூஜை

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை விசேட பூஜைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை விசேட புத்தாண்டு பூஜைகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ரங்கவரதராஜ குருக்களின் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற்றன.

இந்த துர்முகி வருட புத்தாண்டு பிறப்பு பூஜையில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இதன்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டதுடன் பிரதம குருக்களினால் கைவிசேடமும் வழங்கிவைக்கப்பட்டது.