கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் பிற்போடல்

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலை கலாச்சார பீட     1ம் வருடம் 2ம் பருவம் மற்றும் 2ம் வருடம் 1ம் பருவ மாணவர்களுக்கான 18.04.2016ம் திகதியிலிருந்து 22.04.2016ம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்ட பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 25.04.2016ம் திகதியிலிருந்து பரீட்சைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அட்டவணையின் படி வழமைபோல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்போடப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக பதிவாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.