தொழில்சார் வல்லுனர்களுக்கான தேசிய தொழில்சார் தகைமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு மாவட்ட அபிவருத்திக்கான ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில்சார் வல்லுனர்களுக்கான தேசிய தொழில்சார் தகைமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  19.04.2016    மட்டக்களப்பில் இடம்பெற்றது.


சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) அனுசரணையுடன், தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் (நயிட்டா) தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ் (என்.வி.கியூ-ஆர்.பி.எல்) வழங்கும் நிகழ்வு 19.04.2016     மட்டக்களப்பு மண்முனை  வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) தேசிய திட்ட இணைப்பாளர் திரு சு. சிவப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  .எஸ். கிரிதரன் ,  கௌரவ அதிதியாக தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நயிட்டா) உப தலைவர்  கலாநிதி. ஏ.யு.சீ. அத்துகோரல , விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர்  . ஆர். நெ,டுஞ்செழியன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர்  . ரீ. தவராசா, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தேசிய திட்ட இணைப்பாளர்  . ஆர். சிவப்பிரகாசம்  , தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நயிட்டா)  நிதிப் பணிப்பாளர் ஜனாப். எம்.ஐ.எம்.அஸ்ஹர், வடகிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஜனாப்இ எம்.எச். சாஜஹான் , மாவட்ட முகாமையாளர்; ஜனாப் .இ எஸ்.ஏ.எம் சாலீம் மௌலானா   , மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்தக்காரர் சங்கத்தலைவர்  . வி. ரஞ்சிதமூர்த்தி  , பி.டீ.சி.சி.ஐ.ஏ ,தலைவர் ,. எஸ். அகிலன்   மற்றும் அழைப்பு அதிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்ட தொழிற் துறைசார் திறன்பெற்ற தொழில் வல்லுனர்களுக்காக தேசிய தொழில்;சார் தகைமை  (என்.வி.கியு) சான்றிதழான  முன்கற்கையை அங்கிகரித்தல் முறைமையின் (ஆர்.பி.எல்) கீழ் மதிப்பீடுகளை மேற்கொண்டு வழங்கப்பட்டது .

 தொழிற் துறைகளாக, கனரக வாகனப் பொறிவலர், மோட்டார் சைக்கிள் பொறிவலர், நீர்க்குழாய் பொருத்துனர், கொத்தனார், தச்சனார், மின்வினைஞர், குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கல், தையற்காரர், கணணிப்பிரயோக உதவியாளர்  , தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவினைஞர் முதலான தொழிற் துறைகளுக்கான தேசிய தொழில் சார் தகைமைச் (என்.வி.கியு) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 இந்நிகழ்வில் பிரதம மற்றும் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டவர்களுக்கும்  தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நயிட்டா)  மட்டக்களப்பு மாவட்ட பதவியணியினர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இத்திட்டமானது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் (நயிட்டா)  வினால் கடந்த 2015 இல் தொழில்சார் வல்லுனர்களுக்காக நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பயிற்சிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட விண்ப்பங்கள் 147 தொழில்சார் மதிப்பீடுகளை நடாத்தியதன் மூலம் சித்தி பெற்ற 116 தொழில் வல்லுனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .