மாமாங்கம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கள் தீப்பற்றி எரிந்துள்ளது

(லியோ)

மட்டக்களப்பு
மாமாங்கம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாமாங்கம்  அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து மாமாங்கம் பகுதியை நோக்கி பயணித்த KT - 1442  காருடன்  GL -  0349 மோட்டார் சைக்களுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இடம்பெற்ற வாகன விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது .


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்கு வரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .