(லியோ)
லயன்ஸ் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .
லயன்ஸ் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .
இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு
மாநகர எல்லைக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில்
லயன்ஸ் கழக பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது .
அதனை தொடர்ந்து
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும்
நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து
மட்டக்களப்பு லயன்ஸ் கழக அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய
லயன்ஸ் கழக அங்கத்தவர்கள்
இணைந்துகொண்டதுடன் சிறந்த லயன்ஸ்
அங்கத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர் .
இதனை தொடர்ந்து கழகத்தினால் தெரிவு
செய்யப்பட்டவர்களுக்கு உளர் உணவு பொதிகளும் ,வாழ்வாதார நிதி உதவிகளும் , இலவச
மூக்கு கண்ணாடிகளும் , மற்றும் தரிசனம் இல்ல மாணவர்களுக்கு கணணியும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வின் போது லயன்ஸ் கழக அங்கத்தவ பிள்ளைகளின் சிறந்த பெறுபேறுகளை பெற்ற
மாணவர்களையும் கௌரவிக்கப்பட்டு விருதுகளும்
வழங்கப்பட்டன .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர் .