லயன்ஸ் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள்

(லியோ)

லயன்ஸ் கழகத்தின்
41வது ஆண்டு  நிறைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .   

 லயன்ஸ் கழகத்தின் 41வது ஆண்டு   நிறைவு தின நிகழ்வுகள் சர்வதேச லயன்ஸ் கழக ஆளுநர் விக்கும் பிரிய வீரக்கொடி தலைமையில் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது .

இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில்  லயன்ஸ் கழக பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது .

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றது .


இதனை தொடர்ந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழக அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்   புதிய லயன்ஸ் கழக  அங்கத்தவர்கள் இணைந்துகொண்டதுடன்  சிறந்த லயன்ஸ் அங்கத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர் .

இதனை தொடர்ந்து  கழகத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உளர் உணவு பொதிகளும் ,வாழ்வாதார நிதி உதவிகளும் , இலவச மூக்கு கண்ணாடிகளும் , மற்றும் தரிசனம் இல்ல மாணவர்களுக்கு கணணியும்  வழங்கப்பட்டது .  

இந்நிகழ்வின் போது லயன்ஸ் கழக அங்கத்தவ  பிள்ளைகளின் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கப்பட்டு  விருதுகளும் வழங்கப்பட்டன .  
இந்நிகழ்வில் மட்டக்களப்பு லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர்   கலந்துகொண்டனர் .