(லியோ)
சந்துருக்கொண்டான் ஒசானம் நிலைய விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஒசானம் நிலைய வளாகத்தில் இன்று இடம்பெற்றது
சந்துருக்கொண்டான் ஒசானம் நிலைய விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஒசானம் நிலைய வளாகத்தில் இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குற்பட்ட சந்துருக்கொண்டான் ஒசானம் நிலைய விசேட தேவையுடைய மாணவர்களின்
வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள்
அருட்சகோதரி ரீடா ரோபர்ட் தலைமையில் புனித வின்சென்ட் டீ பவுல் ஏற்பாட்டில் ஒசானம் நிலைய வளாகத்தில் இன்று
இடம்பெற்றது .
விசேட தேவையுடைய
மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் நிலைய ஆசிரியர்களினால்
மாணவர்களுக்கு பயிட்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்களின் விசேட வினோத விளையாட்டு
நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா மற்றும் அதிதிகளாக
அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , நிலைய ஆசிரியர்கள் , மாணவர்கள் , மாணவர்களின்
பெற்றோர்கள் கலந்துகொண்டார் .