சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உளர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

(லியோ)


மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உளர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு   மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உளர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு – அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர்  டி .ஐ .ஜி .ஜெயகொட ஆராச்சி தலைமையில்  மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ் .எஸ் .பி . உபாலி ஜயசிங்க , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எட்டிஆராச்சி ,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும்   பொலிஸ் சேவையின் போது  உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .