(லியோ)
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தினால்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உளர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு பொலிஸ்
திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப
உறுப்பினர்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உளர் உணவு பொதிகள் வழங்கும்
நிகழ்வு மட்டக்களப்பு – அம்பாறை பிரதி
பொலிஸ் மா அதிபர் டி .ஐ .ஜி .ஜெயகொட
ஆராச்சி தலைமையில் மட்டக்களப்பு சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ் .எஸ் .பி . உபாலி ஜயசிங்க ,
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எட்டிஆராச்சி ,மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் சேவையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப
உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .