மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் பல வாழ்வாதார வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் வி .தவராஜா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வறிய
குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கான உதவி தொகையினையும் வழங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை
உத்தியோகத்தர் எஸ் . அருள்மொழி , முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவன பொருளாளர் ஏ. தயானந்த ரவி , முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவன
ஆலோசகர் கே . அருணாசலம் ,நிறுவன சிறுவர்
நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தர் .டி
.பிரபாகரன் , கிராம சேவை உத்தியோகத்தர்
ஜீவிதன் மற்றும் தெரிவு செய்யப்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர் .