(லியோ)
இருதயபுரம் கிழக்கு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதான வாயில்
தூபியின் மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி நிகழ்வு 03.04.2016 இடம்பெற்றது .
மட்டுநகரில் சிறப்புமிக்க
ஆலயமான விழங்கும் மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதான வாயில்
தூபியின் மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி நிகழ்வுகள்
03.04.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் மிகசிறப்பாக நடைபெற்றது .
ஆலயத்தில் விசேட
கிரிகைகள் காலை இடம்பெற்று தொடர்ந்து 09.00 மணியளவில்
விசேட மகா கும்பாபிஷேக அபிஷேக பூசைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ப . துஷாந்தன் சர்மா
தலைமையில் பிரதிஸ்டா பிரதம குரு சத்தியோயாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ த . சிவகுமாரக் குருக்களினால் ஆலய
பிரதான வாயில் தூபியின் மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி நிகழ்வுகள் நடத்தப்பட்டது
.
இந்நிகழ்வில் இருதயபுரம் கிழக்கு பகுதி பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.
.