(லியோ)
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளம் இலங்கை உதைப்பந்தாட்ட
சங்கங்களுக்கிடையில் 19 வயதுகுற்பட்ட உதைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் உதைப்பந்தாட்ட போட்டிகளை நடாத்தி வருகின்றது .
இதன்கீழ் 19 வயதுகுற்பட்ட மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட சங்கம்
மற்றும் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்க அணிகளுக்கிடையிலான போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு
மைதானத்தில் 03.04.2016 மாலை இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மற்றும்
கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்கங்களுக்கிடையிலான போட்டியில் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்க
அணியினர் இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் கோள்களை போட்டு கிண்ணியா உதைப்பந்தாட்ட
சங்க அணியினர் வெற்றி பெற்றுள்ளனர் .
இந்த போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர
ஆணையாளர் எம் .உதயகுமார் மற்றும்
மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்கங்களின் உறுப்பினர்களும் ,
சங்கத்தின் வீரர்களும் கலந்துகொண்டார் .