19 வயதுகுற்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அணியினர் வெற்றி பெற்றுள்ளனர் .

(லியோ)

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளம் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கங்களுக்கிடையில்  19 வயதுகுற்பட்ட உதைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில்  உதைப்பந்தாட்ட போட்டிகளை நடாத்தி வருகின்றது .

இதன்கீழ் 19 வயதுகுற்பட்ட மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட சங்கம் மற்றும் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்க  அணிகளுக்கிடையிலான  போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் 03.04.2016  மாலை இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்கங்களுக்கிடையிலான  போட்டியில் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்க அணியினர் இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் கோள்களை போட்டு கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்க அணியினர் வெற்றி பெற்றுள்ளனர் .


இந்த போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார்  மற்றும் மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா உதைப்பந்தாட்ட சங்கங்களின் உறுப்பினர்களும் , சங்கத்தின் வீரர்களும் கலந்துகொண்டார் .