குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளியில் நீண்டகாலம் சமூகப்பணியாற்றிவரும் வரையறுக்கப்பட் குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கூட்டுறவு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு அழைப்பு அதிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது குருமண்வெளி பிரதேசத்தில் பல்வேறு பரீட்சைகளில் சாதனைகளைப்படைத்த மாணவர்களும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றிய அதிபர்,ஆசியர்கள் மற்றும் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.