மட்டக்களப்பு வாவியில் இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள வாவியில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவினை ஒட்டியுள்ள வாவிப்பகுதியிலேலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சுமார் 20 வயதுடைய இளைஞன் எனவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.