(லியோ)
“ என் ஜெபம் வீணாகாது “ கிறிஸ்தவ பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு வெளியீட்டு விழா நிகழ்வு 17.04.2016 மாலை
மட்டக்களப்பு இருதயபுரத்தில் இடம்பெற்றது
.
மட்டக்களப்பு வாகரை புனித இராயப்பர் ஆலய பங்கை சேர்ந்த ஜோசப்
சிபில்ராஜ் வெளியிடும் “ என் ஜெபம்
வீணாகாது “ கிறிஸ்தவ பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு வெளியீட்டு விழாவும் , கௌரவிப்பு
நிகழ்வு அருட்தந்தை எம் .ஸ்ரனில்லோஸ் தலைமையில்
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர்
ஆலய முன்றலில் 17.04.2016 மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் எ
.தேவதாசன் ,சிறப்பு விருந்தினர்களாக யேசு சபை துறவி அருட்பணி போல் சற்குண நாயகம் ,
சிறிய குருமட அதிபர் அருட்பணி . மொறாயஸ் ,
மறை மாவட்ட ஆயர் இல்ல நிதிப் பொறுப்பாளர் அருட்பணி இஞ்ஞாசி ஜோசப் மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள்
, பங்கு மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் புனித இராயப்பர் ஆலய பங்கை சேர்ந்த ஜோசப்
சிபில்ராஜ் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் பல
அழிவுகளையும் , இழப்புக்களையும் சந்தித்த இவர் மாண்டவர் மீண்டு எழுந்தார் என்பதற்கு அமைய இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளாரின் உதவியுடன் கிறிஸ்தவ பாடல்களை இயற்றி “ என் ஜெபம் வீணாகாது “ எனும் இசை இறுவெட்டினை வெளியிட்டுள்ளார் .
வெளியிடப்பட்டுள்ள இறுவெட்டில் இவருடைய கருத்தாளம்
மிக்க வரிகளுடன் இசையினையும் ஒழுங்கமைத்து வெளியிடப்பட்ட முதலாவது இறுவெட்டு விழாவில் இவருக்கு பொன்னாடை
போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .