மட்டு - இந்து கல்லூரி மாணவர்களுக்கான வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்களுக்கான  வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று இடம்பெற்றது.


 இலங்கை  பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு  அமைவாக வீதி விபத்து தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை வாகன போக்குவரத்து பொலிசாரினால் விழிப்புணர்வு செயல் திட்டங்கள் நாடளாவியல் ரீதியில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதன் கீழ்  மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ் .பி . உபாலி ஜயசிங்க வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய வாகன  போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி   ஐ .பி . குணதிலக  தலைமையில்  மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்களுக்கான  விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது .


 இன்று இடம்பெற்ற மாணவர்களுக்கான  வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் வளவாளராக காத்தான்குடி  வாகண  போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர் .ஜி .டி .திலங்க ஜயலால்    கலந்துகொண்டார் .


இதன் போது பிரதான வீதிகளை பாதுகாப்பான முறையில் கடப்பது மற்றும் வீதி போக்குவரத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பில்  மாணவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது .


 மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துகளை  தடுக்கவேண்டுமென்றால் மாணவர்கள் வீதி ஒழுங்கு விதிகளை பின்பற்றுவதுடன் ஏனையவர்களுக்கும்  .

இது  தொடர்பில் அறிவுறுத்த வேண்டும்  என   காத்தான்குடி  வாகண  போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர் .ஜி .டி .திலங்க ஜயலால்   குறிப்பிட்டார் . 

இதன் போது மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் தொடர்பான வீடியோ ஒளிபதிவுகளும் காண்பிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாகண  போக்கு வரத்து பொலிஸ் அதிகாரிகள் , பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர் .