(லியோ)
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி பொதுசுகாதார
பரிசோதகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு பணிகள்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி . பாமினி அச்சுதன் தலைமையில்
மட்டக்களப்பு மாநகர சபை . மண்முனை வடக்கு
பிரதேச செயலகம் , மலேரியா தடுப்பு
பிரிவு . பாதுகாப்பு படைபிரிவு , மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு மற்றும்
பொதுசுகாதார பரிசோதகர் பிரிவு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று
மேற்கொள்ளப்பட்டன .
இன்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு
ஒழிப்பு நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு
பிராந்திய பொது சுகாதார
மேற்பார்வை பரிசோதகர் . கே . ஜெயரஞ்சன் தெரிவித்தார்
இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி . பாமினி அச்சுதன் மட்டக்களப்பு பிராந்திய
பொது சுகாதார மேற்பார்வை
பரிசோதகர் . கே . ஜெயரஞ்சன் , கல்லடி பொதுசுகாதார பிரிவு பரிசோதகர் கே .ஜெய்சங்கர் , மட்டக்களப்பு
பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொலிஸ் அதிகாரி ஐ .பி . சுல்பிகர் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,பாதுகாப்பு
படை வீரர்கள் . பொதுசுகாதார தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.