மட்டக்களப்பில் இந்து சமய எழுச்சி பேரணி

மட்டக்களப்பு மாவட்ட அறுபத்தி மூன்று நாயன்மார்களின் குரு பூஜையும் இந்து சமய எழுச்சி பேரணியும்  ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

அறுபத்தி மூன்று நாயன்மார் நற்பணி மன்றத்தின் தலைவர் சக்தி கே.குமாரதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இந்து எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் ஊடாக தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலயத்தினை அடைந்ததும் அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத செயலகத்திற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,இந்துக்கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.