புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பெரிய வெள்ளி விசேட திருப்பலி ஆராதனைகள்

(லியோ)

உலகில் உள்ள கிறிஸ்தவர்களின்  புனித தினமாக கருதப்படும் இயேசு கிறிஸ்து  நாதர்  சிலுவையில் அறையப்பட்ட  பெரிய வெள்ளி இன்றாகும் .

 இந்த புனித பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் இன்று காலை  திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகளும் பிற்பகல் விசேட திருப்பலிகளும்  இடம்பெற்றது .


பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும்  இன்று காலை திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகளும் பிற்பகல்  விசேட திருப்பலிகளும் இடம்பெற்றன

மட்டக்களப்பின் பேராலயமான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள்  பேராலயத்தில்  இன்று காலை திருச்சிலுவை பாதை நிகழ்வும் பிற்பகல் பெரிய வெள்ளி விசேட திருப்பலி ஆராதனைகள்  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில்  இடம்பெற்றது .

இடம்பெற்ற பெரிய வெள்ளி விசேட திருப்பலி ஆராதனையில் மட்டக்களப்பு பகுதி அனைத்து கிறிஸ்தவர்களும் கலந்துகொண்டனர் .