மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் பிரதேசத்தில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தந்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

15வயதையுடைய சிறுமியே குறித்த சிறியின் தந்தையினால் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பில் உள்ள விடுதியில் தங்கியிப்பதாகவும் நேற்று முன்தினமே வீடுதிரும்பிய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தாயார் வேறு ஒரு திருமணம் செய்து சென்றுள்ள நிலையில் குறித்த பெண் மட்டக்களப்பில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்துவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த சிறுமியின் 45வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.