(லியோ)
மண்முனை பற்று
மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி வழங்குவதற்கான கலந்துரையாடல் ஆறையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .பி. எஸ். எம் .சார்ள்ஸ் வழிகாட்டலுக்கு அமைவாக ஐரோப்பிய
ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால்
செயல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இதன் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மண்முனை
பற்று பிரதேச செயலகம் மற்றும் பட்டிப்பளை
பிரதேச செயலகத்துடன் ,காவியா பெண்கள்
அபிவிருத்தி அமைப்பும் , கைத்தொழில் சேவைகள் பணியகம் இணைந்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற சுயதொழில் ஊக்குவிப்புகளுக்கான கடன் உதவி வழங்கும் திட்டங்களுடன் சமுர்த்தி வங்கி , சனச வங்கி , கொமசல் வங்கி ,
எச் . என் . பி . வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து
செயல்படுகின்றன .
இதன் ஒரு
திட்டம் மண்முனை பற்று மற்றும்
பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி வழங்குவதற்கான கலந்துரையாடல் மண்முனை பற்று ஆறையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஐக்கிய
நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்
உத்தியோகத்தர்கள் , மண்முனை பற்று பிரதேச செயலக அதிகாரிகள் , காவியா, கைத்தொழில்
சேவைகள் பணியகம், சமுர்த்தி வங்கி , சனச வங்கி , கொமசல் வங்கி , எச் . என் . பி .
வங்கி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை பற்று மற்றும்
பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களும் கலந்துகொண்டனர் .