ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுயதொழில் ஊக்குவிப்புகளுக்கான கடன் உதவி

(லியோ)

மண்முனை பற்று மற்றும் பட்டிப்பளை  ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி வழங்குவதற்கான  கலந்துரையாடல் ஆறையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில்  இடம்பெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .பி. எஸ். எம் .சார்ள்ஸ் வழிகாட்டலுக்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . 

இதன் கீழ்  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்   மண்முனை பற்று பிரதேச செயலகம்  மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்துடன்  ,காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பும் , கைத்தொழில் சேவைகள் பணியகம் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  சுயதொழில்  ஊக்குவிப்புகளுக்கான  கடன் உதவி வழங்கும் திட்டங்களுடன்  சமுர்த்தி வங்கி , சனச வங்கி , கொமசல் வங்கி , எச் . என் . பி . வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து செயல்படுகின்றன .

இதன் ஒரு திட்டம்  மண்முனை பற்று மற்றும் பட்டிப்பளை  ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி வழங்குவதற்கான   கலந்துரையாடல்  மண்முனை பற்று ஆறையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்   உத்தியோகத்தர்கள் , மண்முனை பற்று பிரதேச செயலக அதிகாரிகள் , காவியா, கைத்தொழில் சேவைகள் பணியகம், சமுர்த்தி வங்கி , சனச வங்கி , கொமசல் வங்கி , எச் . என் . பி . வங்கி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை பற்று மற்றும் பட்டிப்பளை  ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களும் கலந்துகொண்டனர் .