களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று  05.03.2016 ஆம் திகதி சனிக்கிழமை அதன் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் குருகுல சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிய நிருவாக தெரிவு இடம் பெற்றதுடன்,  இதில் தலைவராக ப.குணசேகரம், செயலாளராக  ச.கோகுலதாஸ், பொருலாளராக  ந.சதிஸ்பரன் உப தலைவராக  சா.தயாபரன் மற்றும்  உப செயலாளராக  கு.றஞ்சித்குமார் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது பழைய மாணவர் சங்கம் தொடர்பாக பல விடையங்கள் ஆராயப்பட்டதுடன் குறிப்பாக எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாகவும் பல விடையங்கள் அனைத்து உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டதுடன், யாப்பும் அங்கிகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில்  அதிகளவிலான உறுப்பினர்கள்  சமூகமளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.